கொடைக்கானல், பிப். 22: கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிந்தனர். ஐகோர்ட் உத்தரவுப்படி கூம்பு வடிவ ஒலிபெருக்கி தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதனை பயன்படுத்துவர்களை போலீசார், வருவாய்த்துறையினர் எச்சரிக்கை செய்து வந்தனர். கொடைக்கானலில் இந்த உத்தரவு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அமலானது. டிஎஸ்பி பொன்னுச்சாமி தலைமையில் கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தியவர்ளுக்கு நோட்டீஸ் வழங்கி விரைவில் அகற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும் மீறி பயன்படுத்தினால் வழக்கு பதியப்படும் என டிஎஸ்பி எச்சரித்தார்.