புதுச்சேரி, பிப். 21: புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரசார குழு, விளம்பர குழு, மீடியா ஒருங்கிணைப்பு குழுவினருடன் அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான சஞ்சத் தத் நேற்று 100 அடி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் தலைமை தாங்கினர். சேர்மன்கள் அமைச்சர் கந்தசாமி (பிரசார குழு), முன்னாள் காங்., தலைவர் ஏவி.சுப்பிரமணியன் (விளம்பர குழு), முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் எம்எல்ஏ., (ஊடக ஒருங்கிணைப்பு குழு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.