புதுச்சேரி, பிப். 21: புதுவை லாஸ்பேட்டையில் தாகூர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர், அங்குள்ள மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் முறையிட்டுள்ளனர்.
அப்போது கல்லூரி முதல்வர் இதுபற்றி விசாரணை நடத்தி, பேராசிரியரை வேறு கல்லூரிக்கு மாற்றுவதாக உறுதி அளித்தாராம். ஆனால் ஏற்கனவே வேறு கல்லூரியிலும் அவர் மீது இதுபோன்ற புகாரின் மீது பணியிட மாற்றல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.