புதுச்சேரி, பிப். 21: புதுவையில் கவர்னரை கண்டித்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து 6 நாட்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் 18ம்தேதி மாலை பேச்சுவார்த்தைக்குபின் போராட்டம் வாபஸ் ஆனது. அதற்கு முன்னதாக முதல்வரின் போராட்டத்தை விமர்சிக்கும் வகையில் காகம் யோகாசனத்துடன் அதை ஒப்பிட்டு கிரண்பேடி புகைப்படம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் மற்றொரு புகைப்படத்தை அவர் சமூக வலைதள பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார். அதில், கவர்னர் மாளிகையில் மின்விசிறி மீது 2 காகங்கள் அமர்ந்திருப்பதுபோல் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது முதல்வரை மீண்டும் அவர் சீண்டும் வகையில் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.