சேத்தியாத்தோப்பு, பிப். 21: சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம், லஞ்சம் வாங்கிய மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதில் அதே ஊரைச் சேர்ந்தவர் வீரமணி (40), விற்பனையாளராக உள்ளார். சேத்தியாத்தோப்பு அடுத்த சாங்காங்குடியை சேர்ந்த மோகன்(46) மேற்பார்வையாளராக உள்ளார். மோகன் விற்பனையாளர் வீரமணியிடம் வேறு கடைக்கு மாற்றாமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு மிரட்டி வந்ததாக தெரிகிறது.