கலசபாக்கம், பிப்.21: கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற பசுமை சாலை கருத்துகேட்பு கூட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படுவதால், 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், நேற்று கலசபாக்கம், போளூர் தாலுகாவுக்குட்பட்ட மேப்பத்துறை, பெலாசூர், ராந்தம், காம்பட்டு, பத்தியவாடி, தென்பள்ளிப்பட்டு, முத்தரசம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு கருத்து கேட்பு கூட்டத்துக்காக 68 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.