புதுச்சேரி, பிப். 20: பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க அனுமதியளிக்க வேண்டும். 3வது ஊதிய உயர்வு மாற்றத்தை உடனே வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் பென்சன்தாரர்களுக்கு 2017 ஜனவரி முதல் பென்சனை மாற்றியமைக்க வேண்டும். பிஎஸ்என்எல் செல்போன் டவர்களை பராமரிக்க அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடந்த 18ம் தேதி 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று 2வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.