பாபநாசம், பிப். 20: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான செயல்விளக்க முகாம் நடந்தது. பாபநாசம் தேர்தல் தாசில்தார் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவப்பிரகாசம், ராஜ்குமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இதேபோல் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் மணி மேல்நிலைப்பள்ளியில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. முன்னதாக ஊர்வலத்தை பாபநாசம் தேர்தல் தாசில்தார் செந்தில்குமார் துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்று கபிஸ்தலத்தில ேபரணி நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.