ஈரோடு, பிப். 20: பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பிஎஸ்என்எல் நில மேலாண்மை கொள்கைக்கு எந்த கால தாமதமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 2ம் நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், தங்களது அலுவலகங்கள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகத்தில், மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.