மாசடைந்த குடிநீர் விநியோகம்

குன்னூர், பிப்.15: குன்னூர் அருகே மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குன்னூர் அருகே உள்ள வசந்தம் நகர் பகுதியில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு விநியோகம் செய்ய கூடிய குடிநீர் மஞ்சள் நிறத்தில் மாசடைந்து வருவதால் அதை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல் பஸ்வசதி, தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் இன்றி இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து குன்னூர் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார்கள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்ததப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: