திருவில்லிபுத்தூர், பிப். 14: திருவில்லிபுத்தூர் அருகே, பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி, சத்யா வித்யாலயா நர்சரி பள்ளி, அக்ஷயா ஹைடெக் பள்ளிகள் ஆகியவை சார்பில், சத்யா வித்யாலயா பள்ளி மைதானத்தில் விளையாட்டு தினவிழா நடைபெற்றது. பள்ளிச் சேர்மன் குமரேசன் தலைமை வகித்தார். மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன், சிஇஓ அரவிந்த், முதல்வர் முருகதாசன், துணைமுதல்வர் சத்தியமூர்த்தி, பள்ளி ஆலோசகர் பாரதி மற்றும் நிர்வாக அதிகாரி அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா, தேசிய பூப்பந்து (பாரா) விளையாட்டு வீரர் பத்ரிநாரயணன், இந்திய கிராமப்புற கபடி குழு தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.