புதுச்சேரி, பிப். 14: இந்திய கம்யூ., புதுச்சேரி மாநிலக்குழு கூட்டம் காமராஜ்நகர் தொகுதியில் துரை.செல்வம் தலைமையில் நடந்தது. துணை செயலாளர் கீதநாதன் அஞ்சலி தீர்மானங்களை முன்மொழிந்தார். தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் அஜீஸ்பாஷா, மூத்த தலைவர் விஸ்வநாதன், மாநில செயலாளர் சலீம், துணை செயலாளர் அபிஷேகம், பொருளாளர் வ.சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து நடத்த வேண்டும். இறக்குமதி மணலை அரசே நேரடியாக கூட்டுறவு அமைப்புகள் மூலமாக விநியோகம் செய்ய வேண்டும். வீட்டுவரியை குறைப்போம் என்ற முதல்வரின் அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.