கரூர் ராயனூர் பகுதியில் கேட் வால்வு கசிவால் வீணாகும் குடிநீர்

கரூர், பிப். 12: கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் நான்கு ரோடு பகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் குழாய்கள் செல்லும் வகையில் கேட்வால்வு அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்த கேட்வால்வில் இருந்து கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலையில் செல்கிறது. இதனால், பல்வேறு பாதிப்புகளை கடைவீதிக்கு வந்து செல்லும் மக்கள் சந்தித்து வருகின்றனர்.

எனவே, கேட்வால்வில் ஏற்பட்டுள்ள கசிவினை நிரந்தமாக தீர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும்  எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள், ஊழியர்கள் மூலம் இதனை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: