திருவண்ணாமலை, பிப்.12: ₹13.87 லட்சம் மோசடி செய்த தனியார் நிதிநிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இதில், டிஆர்ஓ ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி கலெக்டர்) பிரதாப், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டீனா டார்த்தி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். குறைதீர்வு கூட்டத்தில், முதியோர் உதவித்ெதாகை, இலவச வீட்டுமனை பட்டா, சுய உதவிக்குழு கடனுதவி, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 640 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திற்கு சென்று மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்கள் குறித்து விசாரணை நடத்தினார். ேமலும் நலத்திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிலையில், திருவண்ணாமலை வானவில் நகரில் வசித்து வரும் திருநங்கைகள் 10க்கும் மேற்பட்டவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை நகராட்சியில் மட்டும் 50 திருநங்கைகள் இருக்கிறோம். அனைவரும் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்த வீடு கிடையாது. பல வருடங்களாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்ற மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுத்து இலவச வீடும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, எங்கள் சமூகத்திற்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.