சென்னை, பிப். 8: புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வள்ளியப்பன் (38). சென்னை அண்ணா சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர், பாரில் வேலை செய்யும் நபர்களுடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார். ேநற்று முன்தினம் இரவு பணி முடிந்து வள்ளியப்பன் உணவு சாப்பிட அறைக்கு சென்றுள்ளார். அப்போது, பாரில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்கள் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு காலி பாத்திரங்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் இருந்த வள்ளியப்பன், எனக்கான உணவை யார் சாப்பிட்டது என்று கேட்டு, வடமாநில வாலிபர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வடமாநில வாலிபர் அருகில் இருந்த கயிறை எடுத்து வள்ளியப்பன் கழுத்தில் மாட்டி இறுக்கி ன்றுள்ளனர்.இதுகுறித்து பார் ஊழியர்கள் ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.