கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய டிரைவர் சடலம் மீட்பு

சத்தியமங்கலம், பிப். 7:   பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ஜெகன் (35). பிக்கப் வேன் டிரைவர். இவர் கடந்த 4ம் தேதி மாலை பவானிசாகர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே குளிப்பதற்காக சென்ற போது, ஜெகன் வாய்க்காலில் மூழ்கி மாயமானார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினரை வரவழைத்து நீரில் மூழ்கிய ஜெகனை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களாக  நீரில் மூழ்கி மாயமான ஜெகனை  தீயணைப்பு துறையினரும், மீனவர்களும் தேடி வந்தனர். நேற்று மாலை 4 மணியளவில் தொப்பம்பாளையம் அரசு பழத்தோட்டம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஜெகனின் உடல் மீட்கப்பட்டது.  மாயாமான ஜெகனுக்கு சங்கீதா (33) இரு குழந்தைகள் உள்ளனர்.

Related Stories: