24ம் தேதி மாற்றுத்திறனாளி வேலை வாய்ப்பு முகாம்

ஈரோடு, செப். 21: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக ஈரோடு மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்டத் திறன் பயிற்சி மையம் ஆகியன இணைந்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாமை வரும் 24ம் தேதி நடத்த உள்ளன.

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அரங்கில் நடைபெற உள்ள இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8 முதல் 12ம் வகுப்பு வரையிலும் மற்றும் தொழிற்பயிற்சி கல்வி, இளங்கலை மற்றும் முதுகலை வரை படித்துள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 94999 33475 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post 24ம் தேதி மாற்றுத்திறனாளி வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: