கரூர் பஞ்சமாதேவியில் பராமரிப்பின்றி சேதமடைந்த மகளிர் சுகாதார வளாகம்

கரூர், பிப். 6: கரூர் அருகே பஞ்சமாதேவியில் மகளிர் சுகாதார வளாகம் பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் சிரமப்படுகின்றனர். திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்த கூடாது என பிரசாரம் மட்டும் செய்கின்றனர். உள்ளாட்சி நிர்வாகத்தின்கீழ் உள்ள கழிப்பிடங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் இந்த வளாகத்தை சுற்றி முட்செடிகள் படர்ந்துள்ளது. இதனையும் அப்புறப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுகாதார வளாகத்தை கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: