பெரம்பூர், பிப். 5: தண்டையார்பேட்டை திலகர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி (43). இவர், தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகே கடந்த 20 வருடங்களாக தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இவரை தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகே 3 பேர் ஓட ஓட விரட்டி வெட்டினர். உயிருக்கு போராடிய ரவியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி இறந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரவுடி ரேடியோ விஜி என்பவர், ரவி கடையில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், ரவியின் மைத்துனர் வடிவேல், பிரியாணி கிண்டும் கரண்டியால் ரேடியோ விஜியை தாக்கி, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.