புதுச்சேரி, ஜன. 31: புதுவை, ரயில் நிலையத்தில் ஆட்டோவில் இருந்த செல்போன், பணத்தை திருடிய மதுரை ஆசாமி கையும்களவுமாக பிடிபட்டார். புதுவை, கோலாஸ் நகர், பிரான்சுவா தோட்டத்தில் வசிப்பவர் சத்தியமூர்த்தி (42). ஆட்டோ டிரைவரான இவர் ரயில் நிலையம் அருகிலுள்ள ஆட்டோ ஸ்டாண்டில் வண்டி ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று தனது ஆட்டோவை அங்கு நிறுத்தி விட்டு சக ஆட்டோ டிரைவர்களுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்டோவில் இருந்த செல்போன் மற்றும் ரூ.420 ரொக்கத்தை திடீரென ஒரு மர்ம ஆசாமி எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதைப் பார்த்தவர்கள் கூச்சல் போடவே, அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் அவரை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.