சேதுபாவாசத்திரம், ஜன.31: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் வரும் காலங்களில் இயற்கை பேரிடர் ஆபத்துகளை தடுக்க தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் சார்பில் மீன்வளத்துறை அமைச்சருக்கு தமிழ்மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜுதீன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது: மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தற்போது 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுக விரிவாக்க பணிகள் நடைபெற்றுவருகிறது. தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற பல்வேறு பகுதிகளில் ஆற்று முகத்துவாரங்களில்தான் துறைமுகங்கள் அமைந்துள்ளது. ஆறுகள் இல்லாத பகுதிகளில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மல்லிப்பட்டினத்தில் துறைமுக விரிவாக்க பணிகள் தொடங்கும் முன்பாக தூண்டில் வளைவு அமைத்து கொடுத்தால்தான் படகுகள் பேரிடர் மூலம் வரும் ஆபத்துகளை தடுக்க முடியும் என மீன்வளத்துறை அதிகாரிகளிடமும், ஆய்வு நடத்த வந்த அதிகாரிகளிடமும் முறையிட்டு பல்வேறு மனுக்கள் கொடுத்துள்ளோம்