தேனி, ஜன. 31: தேனி எஸ்.பி.க்கு அண்ணா விருதை முதல்வர் இன்று வழங்குகிறார்.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அண்ணா விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இவ்வாண்டு அண்ணா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று மாலை முதல்வர் எடப்பாடி.பழனிசாமி விருதுகளை வழங்க உள்ளார்.