ஒட்டன்சத்திரம், ஜன. 31: அம்பிளிக்கையில் சாலை பணிக்காக தோண்டிய பள்ளத்தில் டூவீலர் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒட்டன்சத்திரம் அடுத்த அம்பிளிக்கை நவக்காணி பகுதியை சேர்ந்த சக்திவேல் மகள் திவ்யா (18). இவர் அம்பிளிக்கையில் உள்ள கிறிஸ்தவ கலை கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு டூவீலரில் சென்றார். அம்பிளிக்கை சாலையில் சென்ற ேபாது அகலப்படுத்தும் பணிக்காக சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் திவ்யா நிலைதடுமாறி டூவீலரிலிருந்து விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.