திருவெண்ணெய்நல்லூர், ஜன. 30: திருவெண்ணெய்நல்லூர் அருகே மதுபாட்டில் ஏற்றி சென்ற லாரி மோதி ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் அய்யனார்(49), விவசாயி. இவர் நேற்று காலை தனது நிலத்தில் உளுந்து அறுவடை செய்வதற்காக மனைவி சுசீலா(46)வுடன் மாட்டு வண்டியில் சென்றுள்ளார். அதே ஊரைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ராஜாராமன், தனகோடி மகன் மோகன் (39) ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். ராஜாராமன் வண்டியை ஓட்டி சென்றுள்ளார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றுள்ளனர். அப்போது பின்னால் டாஸ்மாக் மது பாட்டில் லோடு ஏற்றி வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக மாட்டு வண்டியின் பின்னால் மோதியது.