செங்கம், ஜன.25: செங்கம் அடுத்த மணிக்கல் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. இதில் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.செங்கம் அடுத்த மணிக்கல் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு தாசில்தார் சங்கரன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். விஏஓ ரஞ்சித் வரவேற்றார்.