ஆலங்குளம் காவல் நிலையத்தில் இறகுபந்து விளையாட்டு மைதானம் திறப்பு விழா

ஆலங்குளம் ஜன 24: ஆலங்குளம் காவல் நிலைய வளாகத்தில் இறகுப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. ஆலங்குளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு பணிச்சுமை மற்றும் மனரீதியாக பாதிக்கப்படாத வண்ணம் காவல் நிலையம் அருகிலேயே அவர்கள் விளையாடுவதற்காக இறகுப்பந்து மைதானம் அமைக்கபட்டது. அந்த மைதானத்தின் திறப்பு  விழாவிற்கு ஆலங்குளம் இன்ஸ்பக்டர் ஐயப்பன் தலைமை வகித்து மைதானத்தை திறந்து வைத்தார். எஸ் ஐ விஜய் சண்முகநாதன் முன்னிலை வைத்தார். திருநங்கை ‘இப்படிக்கு ரோஸ்’ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  தொடர்ந்து  காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடத்தை ஆலங்குளம் எஸ்ஐ விஜய் சண்முகநாதன் திறந்து வைத்தார். எஸ்.ஐ சுரேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் மாரியப்பன், எழுத்தர்கள் ஜான்சன், ஜெயபால்  காவலர்கள் கிருஷ்ண

குமார், ஆனந்த், சூர்யா உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

Related Stories: