மன்னார்குடி, ஜன. 23: சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மன்னார்குடிக்கு அடுத்துள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தை மாதத்தில் மகம் நட்சத்திரம் தினத்தன்று தெப்பத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு தெப்பத்திருவிழா நடைபெற்றது .கோயிலிலிருந்து பூமி, நீலா தாயார்கள் சமேதராக புறப்பட்ட சீனிவாசப் பெரு மாள் சேரன்குளம் முக்கிய வீதிகளில் உலா வந்தார்.