மணப்பாறை, ஜன.23: புத்தாநத்தம் அருகே டூவீலரில் வந்த இளம்பெண்ணின் மீது மிளகாய் பொடி தூவி, அவரை தாக்கி 2 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள புங்குருணிப்பட்டியை சேர்ந்தவர் நேருசாமி. இவரது மனைவி பிரியா(27). இவர் நேற்று ஊனையூர் சென்றுவிட்டு மருங்காபுரி வனப்பகுதி வழியாக டூவீலரில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். முடுக்குப்பட்டி அருகே வரும்போது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் பிரியாவின் மீது மிளகாய் பொடியை தூவினர். அது பிரியாவின் மீது படாமல் கீழே விழுந்தது. இதனையடுத்து, பிரியா வந்த டூவீலரை எட்டி உதைத்து கீழே தள்ளிய மர்ம நபர்கள் அவர் கழுத்தில் கிடந்த தாலிச் செயினை பிடித்து இழுத்தபோது, பிரியா அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டு போராடினார்.