ஏர்வாடியில் கந்தூரி விழா

ஏர்வாடி, ஜன.23: ஏர்வாடியில் சேக்சிந்தாமதார் ஒலியுல்லாஹ் அஹமது மல்லிஹாம்மாள் ஒலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா 2ம் தெரு மேல முஹல்லம் பள்ளியில் நடந்து வருகிறது.விழாவை முன்னிட்டு கடந்த 3ம் தேதி முதல் கொடி ஏற்றப்பட்டது. நேற்று மாலை யானையின் மீது 2ம் கொடியை ஏந்தி ஈத்கா தெரு, அரபாத் நகர் மற்றும் 1,2,3,4 ஆகிய தெருக்களில் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மேல முஹல்லம் ஜூம்மா பள்ளி திடலில் கொடி ஏற்றினர். இரவு இஸ்லாமிய பக்தி பாடல் கச்சேரி நடைபெற்றது. இன்று மதியம் அன்னதானம் நடக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு பீர்பானை ஊர்வலம் நடக்கிறது. நிகழ்ச்சியின் முடிவில் பொது மக்களுக்கு நேர்ச்சை வழங்கப்படும். விழா ஏற்பாட்டை மேலமுஹல்லம் சுன்னத் ஜமாத்தார் மற்றும் விழா கமிட்டி இளைஞர்கள் செய்திருந்தனர்.

Related Stories: