உடுமலை, ஜன. 22: உடுமலை அருகே உள்ள கண்ணமநாயக்கனூர் செல்லும் சாலையின் குறுக்கே பிஏபி உடுமலை கால்வாய் பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. உடுமலை அருகே உள்ள கண்ணமநாயக்கனூர் செல்லும் சாலையின் குறுக்கே பிஏபி உடுமலை கால்வாய் செல்கிறது. இந்த பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்த கால்வாய் தோண்டப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்ட பாலம் என்பது குறிப்பிடதக்கது. தற்போது பாலத்தின் மறுபகுதியில் 20க்கும் மேற்பட்ட நகர் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வழியே வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.