திருப்பூர், ஜன. 22: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வலையங்காடு, சாமுண்டிபுரம், தாய்முகாம்பிகை காலனி, சிறுபூலுவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்ளும், மாணவ, மாணவிகளும், தங்கள் பணி நிமித்தமாக திருப்பூரின் மத்திய பகுதிக்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு 25-சி, 1ஏபி, 39 என குறிப்பிட்ட பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. இதில், சில நாட்களில் அந்த பஸ்களில் ஏதாவது ஒன்று வராமல் போவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் போதுமான பஸ் வசதி இல்லாததால் பனியன் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.