ஊட்டி, ஜன. 22: குன்னூர் பகுதியில் நீர்நிலைகளை ஒட்டி பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பிரகாசபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டித்தரப்படும் என கலெக்டர் ெதரிவித்தார். நீர் நிைலகளை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்களை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக குன்னூரில் கன்னிமாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள 172 குடும்பங்களி–்ல 77 குடும்பங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவர்களுக்கு மாற்று இடமாக கேத்தி பிரகாசபுரம் பகுதியில் குடிசை மாற்றும் வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும்
வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.