ஊட்டி, ஜன. 22: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் காலியாக உள்ள 10 துப்புரவு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் இயங்கம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பி.சி., முன்னுரிமை-1, முன்னுரிமையற்றது-2, எம்.பி.சி.,முன்னுரிமையற்றது-2, பொது முன்னுரிமையற்றது-1, எஸ்.சி., முன்னுரிமையற்றது-1 என மொத்தம் 7 ஆண் துப்புரவு பணியாளர்களும், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., முன்னுரிமை பிரிவில் தலா 1 வீதம் 3 பெண் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.