மேலூர்/சோழவந்தான், ஜன.22: மேலூர் அருகே டி.கோவில்பட்டியில் நூற்றாண்டை கடந்த பழமையான கானப்படை அய்யனார் கோயில் மற்றும் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில்களில் கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான சுற்றுபகுதி கிராமமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் பழமைவாய்ந்த பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள் சமேத பூபால அய்யனார் மற்றும் மந்தை கருப்பணசுவாமி கோயில்களில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தபின் கடங்கள் புறப்பாடாகி கோயிலை சுற்றி வலம் வந்தன.