சாணார்பட்டி, ஜன. 22: சாணார்பட்டி அருகே வெறிநாய் கடித்து குதறியதில் 25 கோழிகள் இறந்தன. நாய்களை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டி கிராமத்தில் அனைவரும் விவசாயத்தை நம்பி பிளைப்பு நடத்தி வருகின்றனர். போதிய மழை இல்லாததால் பலர் மற்றுத்தொழிலான அடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொசவபட்டியைச் சேர்ந்த மரிய அரோக்கியம் என்பவர் கொசவபட்டி அருகே கல்குளம் என்ற இடத்தில் விவசாயம் மற்றும் கோழி வளர்த்து வருகிறார்.