ஈரோடு, ஜன.22: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அத்தாணி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சுசீலா. இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவர் இறந்து போன நிலையில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சுசீலா நேற்று எஸ்பி சக்திகணேசனிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது கணவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், நான் டெய்லரிங் தொழில் செய்து அதன்மூலம் வரும் வருமானத்தில் எனது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறேன். நான் குடியிருந்து வரும் வீட்டை கடந்த 2012ம் ஆண்டு சத்தி கனரா வங்கியில் 7 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்திருந்தேன். மீண்டும் அதே வங்கியில் 3 லட்சம் ரூபாய் டெய்லரிங் கடன் பெற்றேன். கடனை சிறிது சிறிதாக திருப்பி செலுத்தி வந்த நிலையில் சத்தியமங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன், ரவி, ஜவஹர் ஆகியோர் குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறினர். அப்போது நான் 10 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. வீட்டை அடமானம் வைத்து 12 லட்சம் ரூபாய் பணம் கேட்டேன்.