காஞ்சிபுரம், ஜன.22: காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில், கீழ்கதிர்பூர்-பெரும்பாக்கம் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து கீழ்கதிர்பூர், குண்டுகுளம் வழியாக கீழம்பி புறவழிச்சாலை வரை சாலை அகலபடுத்தும் பணி ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்றது. இந்தச் சாலை வழியாக பெரும்பாக்கம், விஷார், நாட்டேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்துசெல்கின்றனர். குறிப்பாக இந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தப் பகுதி வழியாகச் செல்கின்றனர்.