திருவண்ணாமலை,ஜன.22: திருநெல்வேலி மாவட்டம் தென்காசி நகரை சேர்ந்தவர் ராஜம்பாள்(60). இவர் நேற்று முன்தினம் பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதற்காக வந்தார். திருவண்ணாமலைக்கு வந்த இவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட ராஜம்பாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.