உடுமலை, ஜன. 18:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர்ந்து ஒரு வாரம் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது.பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் குடும்பத்துடன் வெளி இடங்களுக்கு சென்று பொழுதை போக்கி மகிழ்ந்தனர்.உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஞ்சலிங்க அருவியில் மக்கள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அணை, மீன் காட்சியகம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.இதேபோல், அமராவதி அணை, முதலை பண்ணை, சின்னாறு மற்றும் பூங்காக்களிலும் மக்கள் அதிகளவு காணப்பட்டனர்.