காஞ்சிபுரம், ஜன.18:காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிள்ளையார்பாளையம், கிருஷ்ணன் தெரு தென்கோடியில் பொங்கல் விழா நடைபெற்றது.இந்த விழாவுக்கு காஞ்சிபுரம் நகர செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்டத் தலைவர் ஜி.வி.மதியழகன் கலந்துகொண்டு 100 பேருக்கு வேட்டி, சேலை பொங்கல் பரிசாக வழங்கினார்.