சேந்தமங்கலம், ஜன.11: சேந்தமங்கலம் காரவள்ளி சாலையை ₹1.24 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யும் பணியை எம்எல்ஏ சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். சேந்தமங்கலம் காந்திபுரத்தில் இருந்து ராமநாதபுரம்புதூர் வழியாக காரவள்ளி சாலை, சுமார் 2 கி.மீ தொலைவிற்கு குறுகலாக உள்ளதால், ராமநாதபுரம் பகுதியில் வாகனங்கள் சென்றுவர சிரமமாக இருந்து வந்தது. இதனை அகலப்படுத்த, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையை அகலப்படுத்த ₹1.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமிபூஜைக்கு உதவி கோட்டப்பொறியாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்து கொண்டு, பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரேஷன் கடையில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.