பெரும்புதூர், ஜன.11: குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சியில் ஒரத்தூர், நீலமங்கலம், மேட்டுகாலனி, கீழக்கழனி, வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 1420 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ₹ 1000 பணம் வழங்கும் விழா ஒரத்தூர், நீலமங்கலம் ரேஷன் கடைகளில் நடைபெற்றது. விழாவில் மணிமங்கலம்-படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் ஒரத்தூர் சுந்தர் கலந்து கொண்டு 1420 குடும்பங்களுக்கு இலவச பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ₹ 1000 பணத்தை வழங்கினார். விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர் கற்பகம் சுந்தர், வனக்குழு தலைவர் சுபாஷ் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.