வி.கே.புரம், ஜன. 10: நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.சிவந்திபுரம், வி.கே.புரம் மற்றும் ஆலடியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முருகையா பாண்டியன் எம்எல்ஏ, பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள், ரூ.1000 வழங்கி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன், சிவந்திபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தர்மர், துணை தலைவர் பழனி, சிவந்திபுரம் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் பிராங்கிளின், வி.கே.புரம் அதிமுக நகர செயலாளர் கண்ணன், அறிவழகன், சங்கரநாராயணன், ராமையா மற்றும் பேச்சாளர் மீனாட்சிசுந்தரம், அருண், உட்பட பலர் கலந்து கொண்டனர்.1919 தென்காசி செங்கோட்டை தாலுகா கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக்கடை மற்றும் மேலப்புலியூரில் உள்ள ரேஷன் கடைகளில் நடந்த நிகழ்ச்சிக்கு அதிமுக நகர செயலாளர் சுடலை தலைமை வகித்தார். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். அதிமுக மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், அரசு வக்கீல் சின்னத்துரை பாண்டியன், நகர நிர்வாகிகள் கசமுத்து, வெள்ளப்பாண்டி, சந்திரமோகன், சுப்பிரமணியன், சுலைமான், முன்னாள் மாவட்ட செயலாளர் குமார்பாண்டியன் மற்றும் வார்டு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.