திருவண்ணாமலை, ஜன.10: திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் தருவதற்கு லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ேசாதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ₹8 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாள்ேதாறும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் இம்மருத்துவமனையில் பிரசவ வார்டுகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு ₹ஆயிரமும், பெண் குழந்தைகளுக்கு ₹500ம் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு அரசு சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை ₹20க்கு பதில், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சான்றிதழ்கள் தருவதற்கு ₹100 முதல் ₹200 வரை பொதுமக்களிடம் இருந்து கட்டாயமாக வசூல் செய்வதாக திருவண்ணாமலை விஜிலன்ஸ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.