சங்ககிரி அருகே டூவீலரில் சென்ற வியாபாரி திடீர் சாவு

பள்ளிபாளையம், ஜன.8: சங்ககிரி அருகே சிமெண்ட் பேக்டரி முன்பு, நேற்று மதியம் பாத்திரங்களை மொபட்டில்  கட்டிக்கொண்டு வியாபாரத்திற்கு சென்றவர் ஒருவர் திடீரென கீழே விழுந்தார். இதை கண்ட  அக்கம்,பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சங்ககிரி அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,  அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பால் இறந்தவர்  பள்ளிபாளையத்தை சேர்ந்த செல்வம்(52) என்பது தெரியவந்தது. அவரை பற்றிய மற்ற விபரங்கள் கிடைக்கவில்லை.  இதுகுறித்த திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் உத்தரவின் பேரில், குமாரபாளையம்  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: