சாத்தூரில் தமாகா கூட்டம்

சாத்தூர், ஜன. 8: சாத்தூரில் நகர, வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு நகர் தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பாண்டியன், நகர துணைத்தலைவர் ஜோதிநிவாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் கும்கி கார்த்திக் முன்னிலை வகித்தனர். மேற்கு வட்டார தலைவர் முத்துவேல், நகர பொருளாளர் சதீஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் வைப்பாற்றில் கலப்பதால் வைப்பாறு மற்றும் நிலத்தடிநீர் மாசடைந்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் வரும் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: