சிங்கராஜபுரம் ஊராட்சியில் திறப்புவிழா காணாத அங்கன்வாடி மையம்

வருசநாடு, ஜன.8: வருசநாடு அருகே பயன்பாடின்றி பூட்டியே கிடக்கும் அங்கன்வாடி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் 2009ம் ஆண்டு அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், திறப்பு விழா காணாமல், பூட்டியே கிடக்கிறது.இந்த கட்டிடத்தை திறக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குழந்தைகள் அங்கன்வாடிக்கு செல்வதில்லை. இதனால் அங்கு உள்ள மதிய சத்துணவு முட்டைகள் எங்கே செல்கிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` அரசின் திட்டங்கள் இதுபோன்றுதான் பாழடைந்து வீணாடிக்கப்படுகிறது. எனவே, இந்த கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர தேனி கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: