பூந்தமல்லி: போரூர் அருகே சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை போரூர், கணேஷ் அவென்யூ, சக்தி நகர், 5வது தெருவை சேர்ந்தவர் மோகன் (58), சாப்ட்வேர் இன்ஜினியர். சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, கேரளாவில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றார். அங்கிருந்து நேற்று காலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.