திருவண்ணாமலை, ஜன.4: திருவண்ணாமலை அருகே மருமகளை ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்ட மகனை தாய் மற்றும் மருமகன் உட்பட 4 பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை அடுத்த கொழுந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(31), லாரி டிரைவர். இவருக்கும் சாத்தனூரில் உள்ள தனது உறவினர் பெண் தீபா(28) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.திருமணம் முடிந்த சில நாட்களுக்கு பிறகு முருகனின் தந்தை நாகராஜ், தாய் கஸ்தூரி, தங்கை பழனியம்மாள் மற்றும் தங்கையின் கணவர் ஆனந்தன் ஆகியோர், முருகன் லாரி டிரைவர் பணிக்கு சென்றபிறகு தீபாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்களாம்.இதையறிந்த, முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவி தீபாவை சாத்தனூரில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி கடந்த 1ம் தேதி தீபாவை தனது வீட்டிற்கு முருகன் அழைத்து வந்தார்.பின்னர், மறுநாள் 2ம் தேதி காலையில் வீட்டில் தீபா சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, நாகராஜ், அவரது மனைவி மற்றும் மகள், மருமகன் ஆகியோர் தீபாவை ஆபாசமாக பேசினார்களாம்.இதனை கண்ட முருகன் தனது குடும்பத்தாரிடம் தனது மனைவியை ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்டுள்ளார். இது தொடர்பாக முருகனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.