தண்டராம்பட்டு, ஜன.4: புத்தாண்டு பரிசு தரமறுத்ததால் ஏற்பட்ட தகராறில் காதல் கோடி தற்கொலைக்கு முயற்சித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டராம்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவர். இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். தண்டராம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனாராம்.இந்நிலையில் ஆங்கிலப்புத்தாண்டு அன்று மாணவரிடம் பரிசு பொருள் வாங்கித்தருமாறு சிறுமி கேட்டிருந்தாராம். அதற்கு அவர் வாங்கி தரமுடியாது எனக்கூறியதாக தெரிகிறது.இதையடுத்து, நேற்று அதிகாலை இருவரும் ஊருக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சிறுமி கோபித்துக்கொண்டு அருகே இருந்த விஷத்தழையை அரைத்து குடித்துள்ளார்.